மெரினாவில் கண்டெடுக்கப்பட்ட கற்சிலை! தாசில்தாரிடம் ஒப்படைப்பு!!

மெரினாவில் கண்டெடுக்கப்பட்ட கற்சிலை! தாசில்தாரிடம் ஒப்படைப்பு!!



A stone Statute found in the marina

சென்னை மெரினாவில் கற்சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள மெரினா கலங்கரை விளக்கத்திற்கு பின்புறம் இருக்கும் கடற்கரையில் ஒரு அடி உயரம் உள்ள கற்சிலை காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

இந்த சிலையானது ஒரு அடி உயரம் இருக்கின்றது. இங்கு வழக்கமாக ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார், ரோந்து பணியை மேற்கொண்டு இருந்துள்ளனர்.

அப்பொழுது இந்த கற்சிலையானது கலங்கரை விளக்கத்திற்கு பின்புறம் தென்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து திடீரென கண்டெடுக்கப்பட்ட கற்சிலையை மெரினாவுக்கு வந்திருந்த பொதுமக்கள் கண்டு களித்தனர்.

பின் காவல்துறையினர் மயிலாப்பூர் தாசில்தாரிடம் இந்த கற்சிலையை ஒப்படைத்துள்ளனர். இக்கற்சிலை குறித்து வேறு விளக்கம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.