அடக்கொடுமையே!! காதலனுடன் மகள் சென்றதால் தற்கொலை செய்து கொண்ட தாய் தந்தை..!



a-mother-and-father-committed-suicide-because-their-dau

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வேலங்கிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி- சுமதி தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். அவரது மகளுக்கும் பெரியாண்டிக்குழி கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கும் வரும் 20ம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருந்தது.

ஆனால் சுந்தரமூர்த்தியின் மகளுக்கு இந்த திருமண ஏற்பாட்டில் விருப்பமில்லை எனத் தெரிகிறது. மேலும் அவர் அதே கிராமத்தைச் சேர்ந்த பால்ராஜ் என்பவரை காதலிப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Love issues

இந்நிலையில் நேற்று காலை கல்லூரிக்குச் சென்ற மகள் வீடு திரும்பாததால் பதறிப்போன சுந்தரமூர்த்தியும் அவரது மனைவி சுமதியும் கல்லூரிக்குச் சென்று விசாரித்துள்ளனர். பின்பு தான் அவர்களுக்கு தெரியவந்தது தனது மகள் தனது காதலன் பால்ராஜ் என்பவருடன் சென்று விட்டதாக கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த சுந்தரமூர்த்தியும், சுமதியும் வயலில் நெல்லுக்கு அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சி மருந்தை தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.