ஏரிக்கரையில் அனாதையாக கிடந்த ஆண் சடலம்!,, விசாரணையை முடுக்கி விட்ட போலீசார்..!

ஏரிக்கரையில் அனாதையாக கிடந்த ஆண் சடலம்!,, விசாரணையை முடுக்கி விட்ட போலீசார்..!



a-mans-corpse-lying-orphaned-on-the-lake-shore

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த திருவாலங்காடு ரயில் நிலையம் அடுத்த சின்னம்மாபேட்டை தாங்கல் ஏரி உள்ளது. இந்த ஏரியின் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக திருவாலங்காடு காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த திருவாலங்காடு காவல் ஆய்வாளர் அண்ணதுரை தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

விசாரணையில், சடலமாக கிடந்தவர் ராணிப்பேட்டை மாவட்டம் ,பாண்டியநல்லுார் பகுதியை சேர்ந்த பூவேந்தன் (39) என்பதும் அம்பத்துார் எஸ்டேட்டில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. நேற்று முன்தினம் வழக்கம்போல் பணிக்கு சென்று விட்டு இரவு வீட்டுக்கு ரயில் மார்க்கமாக திரும்பிய போது திருவாலங்காடு ரயில் நிலையத்தில் இறங்கி பின் சின்னம்மாபேட்டை தாங்கல் ஏரி அருகே சென்று அவரது பையில் வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து  தற்கொலை செய்துக்கொண்டதும் தெரியவந்தது. 

இதனையடுத்து அவர் பாக்கெட்டில் இருந்த ஐ.டி கார்டு மற்றும் செல்போனை ஆய்வு செய்து அதில் இருந்த அவரது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்ட காவல்துறையினர், சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர். உடல் அருகே கிடந்த பூச்சி மருந்து பாட்டில் மற்றும் அவரது பையுடன் சடலத்தை மீட்ட காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், குடும்ப பிரச்சினையில் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டாரா , அல்லது வேறு யாரேனும் சதி செயலில் ஈடுபட்டார்களா  என பல்வேறு கோணங்களில் காவல்தூறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.