6 மாதத்தில் கசந்த காதல்: கணவன் செய்த காரியத்தால் அதிர்ச்சியில் உறைந்த காதல் மனைவி..!

6 மாதத்தில் கசந்த காதல்: கணவன் செய்த காரியத்தால் அதிர்ச்சியில் உறைந்த காதல் மனைவி..!



A loving wife who is shocked by what her husband has done

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகேயுள்ள தெங்கன்குழிவிளை கிராமட்தை சேர்ந்தவர் மகேஷ்குமார் (33). இவர் கொத்தனாராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி (21). இவர்கள் இருவரும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

திருமணத்திற்கு பின்பு காதல் தம்பதியினர் இருவரும் நாகர்கோவில் அருகேயுள்ள வாத்தியார்விளை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில், சரஸ்வதி வெளியூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு கடந்த வாரம் சென்றுள்ளார். இதன் காரணமாக மகேஷ்குமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். நேற்று காலை வீடு திரும்பிய சரஸ்வதி, வீட்டின் கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்ததை கண்டு கதவை தட்டியுள்ளார்.

நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கப்படாததால் சந்தேகமடைந்த சரஸ்வதி, ஜன்னல் வழியாக எட்டி பார்த்தபோது மகேஷ்குமார் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சரஸ்வதி, இந்த சம்பவம் குறித்து வடசேரி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், மகேஷ்குமாரின் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.