படியில் பயணம் நொடியில் மரணம்: பஸ் படியில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் பரிதாப பலி..!

படியில் பயணம் நொடியில் மரணம்: பஸ் படியில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவர் பரிதாப பலி..!



A journey in a step is death in an instant

செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் மஹாவீர் நகர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் சஞ்சய் (18). இவர் சென்னை, கேளம்பாக்கம் பகுதியில் இயங்கிவரும் தனியாருக்கு சொந்தமான ஹிந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயின்று வருகிறார்.

இவர் இன்று காலை தாம்பரத்திலிருந்து திருப்போரூர் செல்லும் அரசு மாநகர பேருந்தில் முன்பக்க படியில் தொங்கியபடி பயணம் மேற்கொண்ட போது, பேருந்து வண்டலூர் To கேளம்ப்பாக்கம் சாலையில் வண்டலூர் உயிரியியல் பூங்கா பார்க்கிங் எதிரே செல்லும் போது தவறி கீழே விழுந்ததில் அவர் மீது பேருந்தின் பின்பக்க டயர் ஏறியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு துறையினர், கல்லூரி மாணவர் சஞ்சயின் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, அரசு பேருந்து ஓட்டுனர் பெருமாளிடம் (50) விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.