அடப்பாவமே... 1,2 அல்ல 10 முறையா!! கன்னியாகுமரி சாரோன் ராஜ் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்..!

அடப்பாவமே... 1,2 அல்ல 10 முறையா!! கன்னியாகுமரி சாரோன் ராஜ் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்..!



a-girlfriend-who-killed-her-boyfriend

கன்னியாகுமரியில் கல்லூரி மாணவன் சாரோன்ராஜ் கொலை வழக்கில் கைதான அவருடைய காதலி கிரிஷ்மாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

போலீசாரின் விசாரணையில் கிரிஷ்மா தனது காதலனான சாரோன் ராஜை கொலை செய்ய திருவிதாங்கோடு பகுதியில் உள்ள மருந்தகத்தில் காய்ச்சல் மாத்திரைகளை வாங்கி கடந்த 2 மாதங்களில் 10 முறை குளிர்பானத்தில் கலந்து கொடுத்து கொலை செய்ய முயற்சி செய்தது தெரியவந்துள்ளது.

Murder

கடந்த 10 முறையும் சாரோன்ராஜ் எந்தவித பாதிப்பும் இன்றி உயிர் தப்பியதால் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று கசாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததாக கிரிஷ்மா வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும் சாரோனை கொலை செய்ய பயன்படுத்திய மருந்து மாத்திரைகள், விஷ பாட்டில்கள் அனைத்தும் கிரிஷ்மாவின் வீட்டின் பின்புறத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிரிஷ்மா கொலை செய்தது உறுதியானதையடுத்து  கிரிஷ்மா அவரது தாய் மற்றும் மாமா ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.