பிரபல ரவுடி ஓட ஓட சரமாரியாக வெட்டி படுகொலை; திருவாரூரில் பரபரப்பு...!!

பிரபல ரவுடி ஓட ஓட சரமாரியாக வெட்டி படுகொலை; திருவாரூரில் பரபரப்பு...!!



A famous rowdy was hacked to death; There is excitement in Tiruvarur...

பூவானூர் ராஜ்குமார் அவரது வழக்கறிஞர்கள் உள்ளிட்ட ஐந்து பேர், திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டில் வழக்கு ஒன்றில் ஆஜராவதற்காக இன்று காலை வந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து தனது வழக்கறிஞரை கமலாபுரத்தில் விடுவதற்காக, ஐந்து பேரும் காரில் கமலாபுரம் நோக்கி சென்றுள்ளனர். அப்போது கமலாபுரத்திற்கு அருகில், மன்னார்குடியிலிருந்து திருவாரூர் நோக்கி வந்த ஸ்கார்பியோ கார், இவர்களுக்கு கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதில் பின் சீட்டில் அமர்ந்திருந்தவர்கள், டோர் லாக் ஆனதால் வெளியே வர முடியாத சூழலில் இருந்துள்ளனர். இந்நிலையில் ஸ்கார்பியோ காரில் இருந்து இறங்கிய எட்டு பேர் கொண்ட கும்பல், அரிவாள் போன்ற ஆயுதங்களுடன் பூவானூர் ராஜகுமாரை நோக்கி வந்துள்ளனர்.

இதைப் பார்த்த ராஜ்குமார் அவர்களிடமிருந்து தப்பிக்க ஓடி உள்ளார் அப்போது திருட்டுச் சென்று அவர்கள் ராஜகுமாரை கழுத்து கை போன்ற பல்வேறு இடங்களில் சரண்முறையாக அவரை வெட்டினார் இதில் பூவானூர் ராஜ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளத்துரை உட்பட 50க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் பின்னர் ராஜ்குமார் உடலை கைப்பற்றி திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக அனுப்பி வைத்தனர்.

குற்றவாளிகளை கண்டுபிடிக்க, மூன்று தணிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் வாகன சோதனை நடத்தப்பட்டு வருவதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஒரு வருடத்திற்கு முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர், நடேசன் தமிழார்வன் நீடாமங்கலம் கடை தெருவில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதில் முக்கிய குற்றவாளியான ராஜ்குமார் குண்டர் தடுப்பு சட்டத்திற்கு கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமினில் வெளிவந்துள்ளார். இதனால் முன்னுவிரோதம் காரணமாக இந்த கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில் ராஜகுமாரின் உடல் வைக்கப்பட்டுள்ள திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, வளரும் தமிழகம் கட்சியை சேர்ந்த பலர் திரண்டதால், பரபரப்பு ஏற்பட்டது. மேலும் வளரும் தமிழகம் கட்சியினர், திருவாரூரில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் விளம்பல் என்ற இடத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது