கள்ளக்காதலனை உல்லாசமாக இருந்த போது பெட்ரோல் ஊற்றி எரித்த கள்ளக்காதலி; ஆத்திரத்தின் உச்சம்...!!

கள்ளக்காதலனை உல்லாசமாக இருந்த போது பெட்ரோல் ஊற்றி எரித்த கள்ளக்காதலி; ஆத்திரத்தின் உச்சம்...!!



A counterfeiter who was frolicking was doused with petrol; Peak of rage...

தனிமையில் உல்லாசமாக இருந்த போது கள்ளக்காதலன் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ய முயற்சித்த கள்ளக்காதலியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அடுத்த கண்ணுமேய்க்கிபட்டியில் வசிப்பவர் முத்துக்குமார் (38). இவர் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். அதே ஊரில் வசிப்பவர் மகேஸ்வரி (36). இவரது கணவர் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இந்நிலையில் கூலி வேலை செய்து சம்பாதித்து பிள்ளைகளை காப்பாற்றி வருகிறார்.

இந்நிலையில் முத்துக்குமாருக்கும், மகேஸ்வரிக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக் காதலாக மாறியுள்ளது. முத்துக்குமார் இந்த நெருக்கத்தை பயன்படுத்தி மகேஸ்வரியிடம் இருந்து பணம் மற்றும்  நகைகளை வாங்கியுள்ளார்.

மகேஸ்வரி நகைகளை திருப்பி கேட்ட போது முத்துக்குமார் தர மறுத்துள்ளார். மேலும் அடிக்கடி பணம் கேட்டும் பாலியல் ரீதியாகவும் தொல்லை செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியான தவசிபட்டி செல்லும் காட்டுப்பகுதிக்கு சென்று இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர். அப்போது, மகேஸ்வரி பையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை எடுத்து முத்துக்குமார் இடுப்புக்கு கீழ் பகுதியில் ஊற்றி தீ வைத்துள்ளார். 

இதில், படுகாயமடைந்த முத்துக்குமார் கரூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மகேஸ்வரியை கைது செய்தனர். பணம் கேட்டு டார்ச்சர் மற்றும் பாலியல் தொல்லை செய்த விவகாரத்தில் கள்ளக்காதலனை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.