#BREAKING : நடிகர் விஜய் மீது போலிஸில் புகார்.. வாக்குச்சாவடியில் அத்துமீறல்.?!
ஆற்றில் மூழ்கிய கட்டிட தொழிலாளி: நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்பு!,. சோகத்தில் மூழ்கிய நண்பர்கள்..!
ஆற்றில் மூழ்கிய கட்டிட தொழிலாளி: நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்பு!,. சோகத்தில் மூழ்கிய நண்பர்கள்..!
ஆத்தூர் அணையில் குளித்த கட்டிட தொழிலாளி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், ஏ.வெள்ளோடு கிராமத்தில் உள்ள தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜோசப். இவரது மகன் லியோனி தர்மராஜ் (30). இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று தர்மராஜ் அவரது நண்பர்களுடன் ஆத்தூர் அருகேயுள்ள சடையாண்டி கோவிலுக்கு சென்றுள்ளார். கோவிலில் சாமி கும்பிட்டு முடித்த பின்னர், நண்பர்கள் அனைரும் அங்குள்ள ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்ற தர்மராஜ் நீரில் மூழ்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தர்மராஜை தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது, தர்மராஜ் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினர் செம்பட்டி காவல் நிலையத்திற்க்கு தகவல் அளித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செம்பட்டி காவல்துறையினர், தர்மராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.