குளியலறையில் கல்லூரி மாணவி செய்த காரியத்தால் விபரீதம்: தாயும், மகளும் பலியானதால் சோகம்..!.!

குளியலறையில் கல்லூரி மாணவி செய்த காரியத்தால் விபரீதம்: தாயும், மகளும் பலியானதால் சோகம்..!.!


A college student who went for a bath got electrocuted and her mother who ran to save her also died

கோயம்புத்தூர் மாவட்டம், துடியலூர் அருகேயுள்ள, மீனாட்சி கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த். இவரது மனைவி கார்த்திகா (52). இந்த தம்பதியினரின் மகள் 18 வயதான, அர்ச்சனா, இவர் கோவையில் இயங்கிவரும் தனியாருக்கு சொந்தமான கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் அர்ச்சனா இன்று காலை, கல்லூரிக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தார். இதற்கிடையே குளியலறைக்கு என்ற அவர், அங்கிருந்த வாட்டர் ஹீட்டரை ஆன் செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதால் துடித்த அர்ச்சனா, தூக்கி வீசப்பட்டு மயங்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து, அர்ச்சனாவின் சத்தம் கேட்டு அவரது தாய் ஓடி வந்து பார்த்துள்ளார். அப்பொழுது மகள் மயங்கி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கார்த்திகா, மகளைக் காப்பாற்ற முயன்ற போது எதிர்பாராத விதமாக அவரையும் மின்சாரம் தாக்கியுள்ளது.

இதன் காரணமாக தாய், மகள் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த துடியலூர் காவல்துறையினர், உயிரிழந்த தாய், மகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.