அருப்புக்கோட்டை அருகே, பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்த... கல்லூரி மாணவன் தவறி விழுந்து உயிரிழப்பு..!

அருப்புக்கோட்டை அருகே, பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்த... கல்லூரி மாணவன் தவறி விழுந்து உயிரிழப்பு..!



a-college-student-who-was-traveling-on-the-steps-of-a-b

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே அரசுப் பேருந்தில் பயணம் செய்த கல்லூரி மாணவர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளையாபுரத்தை சேர்ந்த மாதேஸ்வரன் என்ற கல்லூரி மாணவன் அருப்புக்கோட்டையில் இருந்து விருதுநகர் செல்லும் அரசு பேருந்தில் படிக்கட்டில் பயணம் செய்துள்ளார். பாலவநத்தம் அருகே பஸ் வளைவில் சென்ற போது, கல்லூரி மாணவர் மாதேஷ், கை தவறி பஸ்ஸில் இருந்து கீழே விழுந்ததில், தலையின் பின்புறம் பலத்த காயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அருப்புக்கோட்டை தாலுகா காவல்நிலைய காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று ஆம்புலன்ஸ் மூலம் மாணவனின் சடலத்தை அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். 
இதை தொடர்ந்து மருத்துவமனை வளாகத்தில் கல்லூரி மாணவர்கள், மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

இது போன்ற விபத்துகளை தடுக்க அரசு பேருந்துகளை, பள்ளி, கல்லூரி நேரங்களில் அதிகமாக இயக்க வேண்டும் என்று மாணவர்கள்  கோரிக்கை வைத்துள்ளனர். கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம், சக மாணவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.