தண்ணீர் என நினைத்து ஆசிட்டை கொடுத்த தாய்... குடித்த சிறிது நேரத்தில் அலறி துடித்த சிறுமி பலி!.

தண்ணீர் என நினைத்து ஆசிட்டை கொடுத்த தாய்... குடித்த சிறிது நேரத்தில் அலறி துடித்த சிறுமி பலி!.



9-year-old-kid-died-because-of-drinking-acid-mother-car

அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த ஒன்பது வயது சிறுமிக்கு அவரது தாயார் தண்ணீர் என நினைத்து ஆசிட்டை கொடுத்ததால்  அதனைக் குடித்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த ஒன்பது வயது சிறுமியை அகல்யா. இவருக்கு சிறுநீரகப் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த  பிரச்சனைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். ஆயினும் சிறுநீரகப் பிரச்சனை குணமடையாததால் மதுரை அரசு மருத்துவமனையில்  உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார்.

tamilnadu

அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் இன்று காலை அகல்யாவுக்கு தண்ணீர் தாகம் எடுத்திருக்கிறது. அதற்காக தனது தாயாரிடம் தண்ணீர் கேட்டுள்ளார் . அப்போது அவரது தாயார் தண்ணீர் என நினைத்து அங்கிருந்து ஆசிட் பாட்டிலை எடுத்து கையில் கொடுத்திருக்கிறார். இதனை தண்ணீர் என நினைத்துக் குடித்த சிறுமியை வயிற்று வலியால் அலறி துடித்துள்ளார். அவரது  அனரும் சத்தம் கேட்டு வந்த மருத்துவர்கள் உடனடியாக அவரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை வழங்கினர்.

ஆயினும் சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தண்ணீர் என நினைத்து ஆசிட்டை குடித்து சிறுமி மரணம் அடைந்த சம்பவம் மதுரை அரசு மருத்துவமனையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.