புதிய விதிமுறைகள்.! இப்படி மழை பெய்தால்தான் விடுமுறை.! மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த பள்ளிக்கல்வித்துறை.!

புதிய விதிமுறைகள்.! இப்படி மழை பெய்தால்தான் விடுமுறை.! மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த பள்ளிக்கல்வித்துறை.!



7-new-rules-for-holiday-due-to-rain

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. மேலும் இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் நிலையும் ஏற்படுகிறது. இந்த நிலையில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை 7 வகையான விதிமுறைகளை அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, அதிகனமழை பெய்தால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்.லேசான மழையோ, தூரலோ இருந்தால் விடுமுறை அறிவிக்கக் கூடாது. பள்ளி துவங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே  விடுமுறை குறித்த முடிவை எடுக்க வேண்டும். மாவட்டம் முழுவதுமான மழை நிலவரம் மற்றும் பாதிப்புகள் குறித்து முதன்மை கல்வி அலுவலர்கள் மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் மாவட்டம் முழுவதும் விடுமுறை அளிக்கக்கூடாது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்க வேண்டும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கும் நாட்களை சனிக்கிழமை போன்ற நாட்களில் ஈடு செய்ய வேண்டும். விடுமுறை காரணமாக எந்த பாடங்களும் விடுபடாமல் முழுமையாக நடத்த வேண்டும்.  பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்கியிருந்தால் அதனை உடனே அப்புறப்படுத்தி, மாணவர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து பள்ளிகள் செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.