மகள் என்று கூட பாராமல் 68 வயது நிரம்பிய காமக்கொடூரன் செய்த செயல்!.

மகள் என்று கூட பாராமல் 68 வயது நிரம்பிய காமக்கொடூரன் செய்த செயல்!.


68 years old man sex torture to daughter in law


திருச்சியை சேர்ந்த பாலகுரு மற்றும்  இவரது மனைவி மாலதி. இருவருக்கும் திருமணமாகி இந்த தம்பதியருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் மூன்று வருடங்களுக்கு முன்பு பாலகுரு இறந்து விட்டார். 

இந்த நிலையில் பாலகுருவின் மனைவி மாலதி, அவரின்  இரண்டு பெண் குழந்தைகளுடன், மாமனார் வீட்டிலேயே தங்கி வசித்துவந்துள்ளார். மாலதியின் மாமனார் 68 வயது நிரம்பியவர். 

இந்த நிலையில் மாலதியின் மாமனார் சண்முகம் தன் மருமகளுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் விரக்தியடைந்த மாலதி அவரின் பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார்.
 
தனது மகன் இல்லாமல் கஷ்டப்பட்டு வாழும் மருமகளை, மகளை போன்று பார்த்துக்கொள்ளாமல் அவரது பெற்றோர்கள் இல்லாத நேரம் பார்த்து வீட்டிற்குள் சண்முகம் மாலதியைப் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.

அவரிடமிருந்து தப்பித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார் மாலதி. இதனையடுத்து அனைத்து மகளிர் போலீஸ் சண்முகத்தைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.