சாமி ஊர்வலத்தில் அடிதடி... 3 பேருக்கு கத்திக்குத்து... 23 வயது இளைஞர் கைது.!

சாமி ஊர்வலத்தில் அடிதடி... 3 பேருக்கு கத்திக்குத்து... 23 வயது இளைஞர் கைது.!



23-year-old-young-man-arrested-for-stabbing-three-peopl

வேலூர் மாவட்டத்தில் ஆடிக் கிருத்திகை  கொண்டாட்டத்தின்போது சாமி ஊர்வலத்தில் நடனம் ஆடுவதில் ஏற்பட்ட தகராறில் மூன்று இளைஞர்கள் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

வேலூர் மாவட்டம் வாணியர் தெருவில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு சாமி வீதி உலா ஊர்வலம் நடைபெற்றது. அப்போது இளைஞர்கள் பலர் ஒன்றாக சேர்ந்து நடனமாடி இருக்கின்றனர். இந்நிலையில் தோட்டப்பாளையத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்று இளைஞருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சில இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது .

tamilnaduஇதனைத் தொடர்ந்து வாணி தெருவை  சேர்ந்த ராஜேஷ்(20), அரவிந்தன்(21), கார்த்திகேயன்(29) ஆகியோர் சிவகுமாரை தட்டி கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சிவக்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மூன்று பேரையும் வெட்டி இருக்கிறார்.

tamilnaduஅவர்களது அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வரவே அங்கிருந்து தப்பிச் சென்று இருக்கிறார் சிவக்குமார். இதனைத் தொடர்ந்து காயமடைந்த மூன்று பேரையும் பொதுமக்கள் மீட்டு வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பதுங்கியிருந்த சிவகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.