வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தைக்கு நேர்ந்த சம்பவம்!

வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 2 வயது குழந்தைக்கு நேர்ந்த சம்பவம்!



2 years old girl death in kolam

சென்னை மேடவாக்கம் காந்திநகர் பிள்ளையார் கோவில் தெருவில் சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். இவருக்கு அபிநயா என்ற மனைவியும், 2 வயதில் தன்ஷிகா என்ற பெண் குழந்தையும் இருந்துள்ளது. இந்த நிலையில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த தன்ஷிகா குழந்தை திடீரென காணாமல் போனது.

chennai

இதனையடுத்து குழந்தையின் தாயார் அபிநயா அவரை பல இடங்களில் தேடி வந்துள்ளார். அப்போது வீட்டின் அருகே உள்ள குளத்தில் குழந்தை தன்ஷிகா மயங்கி கிடந்துள்ளார். இதனையடுத்து உடனடியாக குழந்தையை மீட்ட பெற்றோர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

அங்கே குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

chennai

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்தால் போலீசார் குழந்தை குளத்தில் தவறி விழுந்து இறந்ததா? அல்லது கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.