BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
பெற்றோர்களே உஷார்.. தண்ணீர் வாலியில் விழுந்து 2 வயது சிறுமி பலி.!
வேலூர் மாவட்டத்தில் உள்ள திருவலம் நரிக்குறவர் காலனி பகுதியை சேர்ந்தவர் வீராசாமி. இவரது 2 வயது மகள் வீட்டில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது குழந்தையின் தாய் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார்.

இதில் குழந்தை வீட்டிற்கு வெளியே பாலியல் இருந்த தண்ணீரில் கைகளை நனைத்தபடி விளையாடியுள்ளார். அப்போதே யாரும் எதிர்பாராத நேரத்தில் சிறுமி வாலியில் உள்ள தண்ணீரில் விழுந்து மூழ்கி மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பின்னர் நீண்ட நேரத்திற்கு பிறகு தாய் தனது குழந்தையை தேடிய போது தண்ணீரில் மூழ்கி உயிரிழந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த திருமணம் போலீசார் உயிரிழந்த குழந்தைகள் உடலை கைப்பற்றி பெரிதாக பரிசோதனைக்காக வேலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.