ஏம்மா இப்படி பண்ணுன... திருமணமான ஏழு ஆண்டுகள் கழித்து இளம்பெண் எடுத்த விபரீத முடிவு... கதறும் மகள்கள்!!

ஏம்மா இப்படி பண்ணுன... திருமணமான ஏழு ஆண்டுகள் கழித்து இளம்பெண் எடுத்த விபரீத முடிவு... கதறும் மகள்கள்!!



2 daughters cried about her mother died incident

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்த அம்மாவாசை பாளையம் பகுதியில் வசித்து வருபவர் கூத்தன் - சோனியா காந்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் சோனியா காந்தி அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் வயிற்று வலி குணமாகவில்லை.

இதனால் மிகவும் மன வேதனையில் இருந்து வந்துள்ளார் சோனியா காந்தி. சம்பவ தினத்தன்று வழக்கம் போல் வயிற்று வலியால் துடித்துள்ளார் சோனியா காந்தி அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் தனது சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் அறிந்து சோனியா காந்தியின் மகள்கள் கதறி துடித்துள்ளனர்.

Mother died

உடனே இச்சம்பவம் குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே போலீசார், சோனியாகாந்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.