ஒன்னு இரண்டு இல்ல! வலையில் விழுந்த பல சிறுமிகள்! வெளியில் சென்று வீடு திரும்பிய தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளியான பல அதிர்ச்சி தகவல்கள்

ஒன்னு இரண்டு இல்ல! வலையில் விழுந்த பல சிறுமிகள்! வெளியில் சென்று வீடு திரும்பிய தாய்க்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளியான பல அதிர்ச்சி தகவல்கள்



19-years-old-boy-used-girls-via-instagram-accounts

சிறுமிகளை மயக்கி அவர்களுடன் உல்லாசம் அனுபவித்துவந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளன்னர்.

விருதாச்சலம் அருகே உள்ள மகேந்திர நல்லூரைச் சேர்ந்தவர் 19 வயதாகும் ஜெயக்குமார். இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் பல்வேறு கணக்குகளை தொடங்கி அதன்மூலம் சிறுமிகளுடன் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு அவர்களுடன் உல்லாசமாக இருப்பது, பின்னர் அதனை புகைப்படம் அல்லது வீடியோவாக பதிவு செய்வது என வாடிக்கையாக வைத்திருந்துள்ளார் ஜெயக்குமார்.

இந்நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் அவரது தந்தை இறந்தநிலையில் தாயுடன் வசித்துவந்துள்ளார். இந்த பெண்ணை தனது வலைக்குள் விழவைத்த ஜெயக்குமார் சிறுமியின் தாய் வீட்டில் இல்லாத நேரத்தில் சிறுமியின் வீட்டுக்கு அவ்வப்போது சென்று வந்துள்ளார்.

Crime

மேலும் சிறுமியிடம் பல ஆசைவார்த்தைகளை கூறி அவரிடம் பாலியல் அத்துமீறல் செய்துள்ளார். இந்நிலையில் வழக்கம்போல் சிறுமியின் தாய் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து ஜெயக்குமார் சிறுமியின் வீட்டிற்கு சென்றநிலையில் வழக்கம்போல் அவரிடம் பாலியல் சீண்டல்களை ஆரம்பித்துள்ளார்.

இதனிடையே வெளியே சென்றிருந்த சிறுமியின் தாய் திடீரென வீட்டிற்கு திரும்ப, தனது மகளுடன் இளைஞர் ஒருவர் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். சிறுமியின் தாயாரை பார்த்த ஜெயக்குமார் உடனே அவரை வீட்டைவிட்டு வெளியே தள்ளிவிட்டு சிறுமியுடன் வீட்டிற்குள் இருந்தவாறு வீட்டை உள்பக்கமாக பூட்டியுள்ளார்.

பின்னர் சிறுமியின் தாயர் போட்ட அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து கதவை உடைத்து சிறுமியை மீட்டதோடு ஜெயக்குமாரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனை அடுத்து போலீசார் ஜெயக்குமாரின் தொலைபேசியை வாங்கி சோதனை செய்ததில் ஜெயக்குமார் இதேபோன்று பல்வேறு சிறுமிகளுடன் படுக்கை அறையிலும், வெளியிலும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை கூகுள் டிரைவில் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் கண்டறிந்தனர்.

இதனை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் ஜெயக்குமார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை சிறையில் அடைத்துள்ளனர். ஜெயக்குமாரின் இந்த செயல் அந்த பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.