17 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்.! அதிமுக நிர்வாகி உட்பட 7 பேர் கைது.!

17 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்.! அதிமுக நிர்வாகி உட்பட 7 பேர் கைது.!



17-year-old-girl-gang-rape-police-arrest-7-people-inclu

திருப்பூர் மாவட்டத்தில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் அதிமுக நிர்வாகி உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளக்கோவில் கிராமத்தில் அமைந்துள்ள வீரக்குமார் சுவாமி கோவிலில் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவை முன்னிட்டு கடந்த ஒன்பதாம் தேதி இரவு பாட்டு கச்சேரி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த 17 வயது சிறுமியை ஆறு பேர் கடத்தி சென்று கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தனர்.

Tiruppur

இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டு இருந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் காவல்துறை மேலும் 5 பேரை கைது செய்திருக்கிறது. இந்த வழக்கில் முன்னர் கைது செய்யப்பட்ட மணிகண்டன் மற்றும் பிரபாகர் ஆகியோர் கொடுத்த தகவலின் பேரில் மற்ற நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக  காவல்துறை தெரிவித்துள்ளது.

Tiruppur

காவல்துறை தகவலின் படி அதிமுக ஐடி பிரிவை சேர்ந்த தினேஷ் மற்றும்  பாலசுப்ரமணி நவீன் நந்தகுமார் சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.