14 வயது மனைவி கர்ப்பம்.. கணவர் போக்சோவில் கைது.!

14 வயது மனைவி கர்ப்பம்.. கணவர் போக்சோவில் கைது.!



14 years old girl pregnant husband arrested in tharmapuri

தர்மபுரியில் 14 வயது சிறுமி கர்ப்பமான நிலையில், காதல் கணவர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள குழிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் தேவராஜ். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இதில், அதே கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார்.

tharmapuri

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் தேவராஜும், சிறுமியும் திடீரென காணாமல் போயுள்ளனர். இதனையடுத்து அவர்கள் இருவரும் அருகில் உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சிறுமிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதால் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்ததில் கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

tharmapuri

இதனிடையே, அவருக்கு 14 வயது தான் ஆகிறது என்பதை மருத்துவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஓம் சிவ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் தேவராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.