வீடு புகுந்து 13 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்த 4 மாணவர்கள்... சென்னையில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!

வீடு புகுந்து 13 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்த 4 மாணவர்கள்... சென்னையில் நிகழ்ந்த பரபரப்பு சம்பவம்!!



13 years old girl Sexual harrasment by 4 student in Chennai

சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்த தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். அதில் 13 வயதான இரண்டாவது மகள் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 8 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சிறுமியுடன் படிக்கும் 8-ம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் மாணவியின் வீட்டுக்கு சென்று படிப்பதை வழக்கமாக வைத்திருந்தனர்.

இந்நிலையில் ஒரு நாள் சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து உள்ளே புகுந்த மாணவர்கள் 4 பேரும் சிறுமியை கட்டி வைத்து ஆடைகளை கழற்றி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி சென்றுள்ளனர்.

chennai

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி நடந்தவற்றை தனது சகோதரியிடம் கூறியுள்ளார். அவர் தனது தாயிடம் சொல்வே அதிர்ச்சியடைந்த தாய் ராயபுரம் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பின்னர் 4 மாணவர்களும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் காசிமேடு பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.