13 வயது சிறுமி 5 மாத கர்ப்பம்.! சிக்கிய குற்றவாளி.! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மைகள்.!

13 வயது சிறுமி 5 மாத கர்ப்பம்.! சிக்கிய குற்றவாளி.! விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மைகள்.!



13-year-girl-sexually-abused-by-father-friend

சேலத்தில் 13 வயது சிறுமி தந்தையின் நண்பரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு,5 மாதம் கர்ப்பமான நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சேலம் குரங்கு சாவடி பகுதியில் கட்டிட தொழிலாளி ஒருவர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். அவருக்கு 13 வயதில் மகள் ஒருவர் உள்ளார். அவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் அண்மையில் மாணவிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. அதனால் சிறுமியை அவரது பெற்றோர் சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி ஐந்து மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் உடனே இதுகுறித்து சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் சிறுமியிடம் விசாரணை செய்துள்ளனர். அப்பொழுது தனது தந்தையின் நண்பர் ஞானமூர்த்தி என்பவர்தான் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து போலீசார் ஞானமூர்த்தியை விசாரணை செய்தபோது அவர் தான் சிறுமியின் தந்தையின் நண்பர் எனவும், ஒன்றாக கட்டட வேலைக்கு செல்வதாகவும் கூறியுள்ளார்.

மேலும் அவர் அவ்வபோது சிறுமியின் வீட்டிற்கு வந்ததாகவும், அப்பொழுது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். இதனை அடுத்து போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும் அன்று இரவே அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.