மீண்டும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் தேதியில் மாற்றம்.!

மீண்டும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் தேதியில் மாற்றம்.!



122th-correction-paper-date-changed

கடந்த மார்ச் மாதம் 2ஆம் தேதி தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மார்ச் 24ஆம் தேதி முடிவடைந்தது. தமிழகம் மற்றும் புதுவையில் மொத்தமாக 8 லட்சம் மாணவர்கள் பொது தேர்வை எழுதிய நிலையில் அவர்களின் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24 ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. 

அதனை தொடர்ந்து ஏற்ப்பட்ட கொரோனா எதிரொலியால் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. எனவே பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் தேதி மார்ச் 31 ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 7ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.

12th Exam

ஆனால் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால் மீண்டும் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் தேதியில் மாற்றம் ஏற்ப்பட்டுள்ளதாக தேர்வு துறை அறிவித்துள்ளது.