விருதுநகர் : விஷப் பூச்சி கடித்து 7ம் வகுப்பு பள்ளி மாணவி உயிரிழப்பு.!

விருதுநகர் : விஷப் பூச்சி கடித்து 7ம் வகுப்பு பள்ளி மாணவி உயிரிழப்பு.!



12 years old girl death for bite insects

விருதுநகரில் விஷ பூச்சி கடித்து 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சாமிநத்தம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி மாரிசெல்வம். இவரது மனைவி முத்துமாரி. இந்த தம்பதியினருக்கு காவிய லட்சுமி (வயது 12) என்ற மகள் உள்ளார். இந்த சிறுமி சாயர்புரம் பகுதியில் உள்ள பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

Virudhunagar

இந்த நிலையில் இவர்களது வீட்டில் தூசி படிந்தும், சிலந்தி வலை பிண்ணியும் இருந்ததால் முத்துமாரியும், காவிய லட்சுமியும் சேர்ந்து வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென சிறுமி காவிய லட்சுமி கத்தி கூச்சலிட்டார். அதிர்ச்சி அடைந்து திரும்பிப் பார்த்த சிறுமியின் தாய் விஷப்பூச்சி ஒன்று அவரை கடித்து விட்டு சென்றது தெரிந்தது.

இதில் அடுத்த சில நொடிகளிலேயே சிறுமி காவிய லட்சுமி மயங்கி கீழே விழுந்தார்.இதனையடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் தாய் முத்துமாரி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிறுமி காவிய லட்சுமியை ஆம்புலன்ஸ் மூலம் சிவகாசி மருத்துவமனைக்கு அடித்துச் சென்றனர்.

Virudhunagar

அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். விஷ பூச்சி கடித்து பள்ளி சிறுமி உயிர் இழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.