சென்னையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த 12 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு..!!

சென்னையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த 12 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு..!!



12 Child Labours rescued in chennai sowcarpet

சென்னையில் உள்ள சவுகார்பேட்டை பகுதியில் நகை பட்டறை கடையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த 12 சிறுவர்கள் குழந்தை தொழிலாளராக பணியாற்றி கொண்டிருந்துள்ளார்.

பின்பு குழந்தை தொழிலாளர் தடுப்பு பிரிவு துணை இயக்குனர் துரைராஜ் தலைமையிலான அதிகாரிகள் இந்த 12 குழந்தை தொழிலாளர்கள் பணிபுரிந்து வருவதை தகவல் அறிந்து அவர்களை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்பு ராயபுரம் அரசு சிறுவர் இல்லத்தில் சேர்த்துள்ளனர். இது குறித்து மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த பாதல் சமந்தா என்னும் 32 வயதுடைய நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.