10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியிடப்படும்: அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு..!

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வெளியிடப்படும்: அரசு தேர்வுகள் இயக்கம் அறிவிப்பு..!



10th-std-public-examination-results-will-be-released-as

10 ஆம் வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 10 ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மாதம் 6 ஆம் தேதி தொடங்கியது. இந்த தேர்வில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமாக 9.55 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியானது.

10th Standard

விடைத்தாள்கள் திருத்தும் பணி தொடங்கியதை அடுத்து 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்  ஜூன் 17 ஆம் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில்,தற்போது விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்த நிலையில் திட்டமிட்டபடி நாளை மறுநாள் 17 ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். மாணவர்கள் தங்கள் முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது.