வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரித்து, பணவரவு பெருக இதை பண்ணுங்க போதும்.!?

வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரித்து, பணவரவு பெருக இதை பண்ணுங்க போதும்.!?



Astrology news about pooja room

பொதுவாக நம் ஒவ்வொருவரின் வீட்டிலும் பூஜை அறை கண்டிப்பாக இருக்கும். கோயிலுக்கு செல்ல முடியாத காலகட்டத்தில் வீட்டில் உள்ள பூஜை அறையில் கடவுளை நினைத்து மனதார வேண்டி வழிபட்டால் அனைத்து விதமான பிரச்சினைகளும், தீர்ந்து மன நிம்மதியை தரும் என்று நம் ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நம் வீட்டில் மன நிம்மதி, பணவரவு போன்றவற்றை அதிகரிக்க ஒரு சில செயல்முறைகளை செய்வதன் மூலம் இவற்றை அதிகரிக்கலாம். இதை குறித்து பதிவில் விளக்கமாக பார்க்கலாம்?

astrology

தினமும் காலை மற்றும் மாலை வீட்டில் விளக்கேற்றி பூஜை செய்தால் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும். பூஜை செய்யும் போது லட்சுமி தேவியின் மந்திரத்தை உச்சரித்து வந்தால் லட்சுமி கடாட்சம் அதிகரிப்பதோடு, வீட்டில் கடன் தொல்லை குறைந்து பண வரவும் அதிகரிக்கும். வீட்டு பூஜை அறையில் கண்ணாடி வைத்தால் தெய்வ கடாட்சம் வீட்டில் அதிகரிக்கும். வீட்டின் வாசலின் எதிர்பக்கத்தில் கண்ணாடி வைக்கும் போது வீட்டிற்குள் நுழைய முயற்சி செய்யும் துஷ்ட சக்திகள் வெளியேறிவிடும்.

பூஜை அறையில் எப்போதும் சொம்பு பாத்திரத்தில் முழுவதுமாக தண்ணீர் நிரப்பி வைக்க வேண்டும். தினமும் இந்த தண்ணீரை மாற்றி விட வேண்டும். அப்படியே வைத்திருந்தாலோ அல்லது அரை சொம்பு அளவிற்கு தண்ணீர் வைத்திருந்தாலோ வீட்டில் தீமையை ஏற்படுத்தும். பூஜை அறையில் விளக்கேற்றும் போது அகல் விளக்கு வீட்டு வாசலில் ஓரத்தில் ஏற்றி வைக்க வேண்டும். இது வீட்டினுள் வரும் தெய்வத்தை வரவேற்கும்.

astrology

வீட்டை எப்போதும் நறுமணமாகவும், சுத்தமாகவும் வைத்துக் கொள்வதன் மூலம் வீட்டில் லட்சுமி கடாட்சம் அதிகரிக்கும். இதனால் தெய்வ சக்தியும் வீட்டினுள் அதிகமாக காணப்பட்டு நேர்மறையான எண்ணங்கள் உருவாகும். வெள்ளிக்கிழமையில் கண்ணாடி பாத்திரத்தில் முழுவதுமாக தண்ணீர் நிரப்பி ஜவ்வாது, பச்சைக் கற்பூரம் போன்றவற்றை கலந்து செந்தாமரை மலரை வைக்க வேண்டும். இவ்வாறு ஒரு சில செயல்முறைகளின் மூலம் வீட்டில் நன்மைகள் ஏற்படும்.