கண்கொத்திப் பாம்பாக காத்திருக்கும் ரசிகர்கள்.! இந்திய அணி மோதும் 3 போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் இன்று விற்பனை.!

கண்கொத்திப் பாம்பாக காத்திருக்கும் ரசிகர்கள்.! இந்திய அணி மோதும் 3 போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் இன்று விற்பனை.!



world cup ticket sale


13வது ஐசிசி 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 5ம்தேதி முதல் நவம்பர் 19ம்தேதி வரை இந்தியாவின் 10 நகரங்களில் நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு போட்டியில் மோதும். இதில் முதல் 4 இடம் பிடிக்கும் அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெறும். 

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. அக்டோபர் 8-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. அதேபோல் அக்டோபர் 11-ஆம் தேதி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இந்தியா-ஆப்கானிஸ்தான் அணியும், அக்டோபர் 19-ஆம் தேதி புனே எம்.சி.ஏ. மைதானத்தில் இந்தியா-வங்காளதேசம் அணியும் மோதுகின்றன.

இந்த 3 போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நேற்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. 'புக் மை ஷோ' இணையதளம் மூலம் ஆன்லைனில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தொடங்கிய சிறிது நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும்  விற்றுத் தீர்ந்தன. தொடர்ந்து இந்திய அணி விளையாடும் ஆட்டங்களுக்கு அடுத்தடுத்த நாட்களில் டிக்கெட்டுகள் விற்பனை நடைபெற உள்ளது.

அதன்படி தர்மசாலாவில் அக்டோபர் 22-ஆம் தேதி நடக்கும் இந்தியா-நியூசிலாந்து அணிக்கும், லக்னோவில் அக்டோபர் 29-ஆம் தேதி நடக்கும் இந்தியா-இங்கிலாந்து அணிக்கும் மற்றும் மும்பையில் நவம்பர் 2-ஆம் தேதி நடக்கும் இந்தியா-இலங்கை அணிக்கும் இடையிலான நடக்கும் 3 போட்டிகளுக்கு இன்று டிக்கெட் விற்பனை நடைபெற உள்ளது.