அடுத்த சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்புடைய டாப் 4 அணிகள் எது? தமிழ் ஸ்பார்க் கணிப்பு!

அடுத்த சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்புடைய டாப் 4 அணிகள் எது? தமிழ் ஸ்பார்க் கணிப்பு!



which-four-ipl-teams-will-go-for-play-off

ஐபில் போட்டியின் 12 வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 24 போட்டிகள் முடிவு பெற்றுள்ள நிலையில் சென்னை, கொல்கத்தா, மும்பை, பஞ்சாப் அணிகள் முதல் நான்கு இடத்தில் உள்ளது. முதல் நான்கு இடங்களை தக்கவைக்கும் அணிகள் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெரும். அந்த வகையில் இந்த வருடம் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற அதிக வாய்ப்புள்ள நான்கு அணிகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

1 . சென்னை சூப்பர் கிங்ஸ்
நடப்பு சாம்பியனான சென்னை அணி எப்போவும் போல் இந்த வருடமும் ஆரம்பத்தில் இருந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. டோனியின் தலைமையிலான கேப்டன்சி சென்னை அணிக்கு மிகப்பெரிய ப்ளஸ். இதுவரை நடந்த 6 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றிபெற்றுள சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது.

IPL 2019

2 . கொல்கத்தா க்ணயிட் ரைடர்ஸ்
தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி மிக சிறப்பாக விளையாடி வருகிறது. புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்த அணி இதுவரை 6 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. தினேஷ் கார்த்திக், ரஸ்ஸல், ராணா, லின், உத்தப்பா போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் கொல்கத்தா அணியில் உள்ளனர். மேலும் சுனில் நரேன், குல்தீப் யாதவ் மற்றும் பியூஸ் சாவ்லா போன்ற தரமான சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பது கொல்கத்தா அணிக்கு மிகப்பெரிய பலமாகும்.

IPL 2019

3 . மும்பை இந்தியன்ஸ்
ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி எல்லா சீசனிலும் ஆரம்பத்தில் சொதப்பி பின்னர் மேலே வரும். ஆனால், இந்த வருடம் ஆரம்பம் முதல் இந்த அணி சிறப்பாக விளையாடி வருகிறது. ரோஹித் சர்மா சற்று சொதப்பினாலும் பாண்டியா பிரதர்ஸ், பொல்லார்ட் போன்ற சிறந்த வீரர்களின் அதிரடி மும்பை அணிக்கு பலமாக அமைந்துள்ளது.

IPL 2019

4 . டெல்லி கேபிட்டல்ஸ்
அடுத்த இந்திய அணி என்று டெல்லி கேபிட்டல்ஸ் அணியை ரசிகர்கள் கூறிவருகின்றனர். அதற்கு காரணம் அணைத்து இளம் இந்திய வீரர்கள் அனைவரும் டெல்லி அணியில் ஆடி வருகின்றனர். டெல்லி அணி 6 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற்றிருந்ததும் அந்த அணியில் உள்ள மிக சிறந்த வீரர்களான ஷிகர் தவான், பிரித்வி ஷா, ஸ்ரேயாஸ் அய்யர், மற்றும் ரிஷாப் பான்ட் போன்ற அதிரடி வீரர்களின் முயற்சியால் இந்த அணி அடுத்த சுற்றுக்கு வாய்ப்பு பெற அதிகம் வாய்ப்புள்ளது.

IPL 2019