தேசிய கீதம் இசைத்த போது விராட் கோலி செய்த கீழ்த்தரமான செயல்.! திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்.! வைரல் வீடியோ.!!

தேசிய கீதம் இசைத்த போது விராட் கோலி செய்த கீழ்த்தரமான செயல்.! திட்டித்தீர்க்கும் நெட்டிசன்கள்.! வைரல் வீடியோ.!!


virat kohli chewing gum while playing the national anthem

நேற்று நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியின்போது தேசிய கீதம் இசைத்தபோது விராட் கோலி செய்த செயல் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. டெஸ்ட் தொடரையும், ஒருநாள் போட்டிகள் தொடரையும் ஏற்கனவே தென் ஆப்பிரிக்கா வென்றுள்ளது.

இந்நிலையில் நேற்று நடந்த 3வது மற்றும் கடைசி போட்டியிலும் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றிபெற்றது. எப்போதுமே போட்டிகள் தொடங்குவதற்கு முன்பாக தேசிய கீதம் இசைக்கப்படுவது வழக்கம். அப்போது வீரர்கள் அனைவரும் அமைதியாக எழுந்து நின்று தேசிய கீதத்தை பாடிக்கொண்டிருப்பார்கள்.

ஆனால் நேற்று போட்டி தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது விராட் கோலி, சாதாரணமாக மைதானத்தில் விளையாடிக்கொண்டிருப்பது போல சூயிங்கம் மென்று கொண்டிருந்தார், இந்த காட்சிகள் வீடியோவாக வெளியாக நெட்டிசன்கள் வெளியான நிலையில் ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.