கடைசி ஓவரில் பஞ்சாப் அணியை சுட்டெரித்த சன்ரைசர்ஸ்.! உம்ரான் மாலிக்கின் அசத்தலால் சுருண்டு விழுந்த பஞ்சாப் அணி.!

கடைசி ஓவரில் பஞ்சாப் அணியை சுட்டெரித்த சன்ரைசர்ஸ்.! உம்ரான் மாலிக்கின் அசத்தலால் சுருண்டு விழுந்த பஞ்சாப் அணி.!



umran malik got 4 wicket in last over

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 28வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது. நேற்றைய ஆட்டத்தில் தாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியன்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி  20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 151 ரன்களை குவித்தது. உம்ரான் மாலிக் 4 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தி பஞ்சாப் அணியை கட்டுப்படுத்தினர். உம்ரான் மாலிக் வீசிய கடைசி ஓவரில் ரன் ஏதும் கொடுக்காமல் 4 விக்கெட் எடுத்து பஞ்சாப் அணியை மிரளவைத்தார்.

இதனையடுத்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 18.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. சன்ரைசர்ஸ் அணியில் அபாரமாக பந்துவீசிய உம்ரான் மாலிக், புவனேஷ்வர் குமாரால் அந்த அணி எளிதாக வெற்றி பெற்றது.