இங்கிலாந்தில் இருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று.!

இங்கிலாந்தில் இருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று.!



two indian player affected corona

இங்கிலாந்து தொடருக்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியை சேர்ந்த 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு சென்று நியூசிலாந்து அணியுடனான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடியது. பின்பு அங்கேயே தங்கியிருந்து ஆகஸ்ட் மாதம் தொடங்க இருக்கும் இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. 

இந்தநிலையில், இந்திய அணியினர் அனைவரும் இங்கிலாந்தில் தங்களது குடும்பத்துடன் தங்கியிருக்கின்றனர். இந்நிலையில் இந்திய வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 வீரர்களும் நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்திய வீரர்கள் இருவருக்கு லேசான அறிகுறிகள் இருந்ததால் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. 2 வீரர்களில் ஒருவருக்கு நெகட்டிவ் வந்த நிலையில் மற்றொருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.