தோள் கொடுத்த இஷான் கிஷன்-பாண்டியா ஜோடி: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பதற்றம்..!!

தோள் கொடுத்த இஷான் கிஷன்-பாண்டியா ஜோடி: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பதற்றம்..!!



The Ishan Kishan-Hardik Pandya duo is giving hope to the Indian team who lost wickets early on.

தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்த இந்திய அணிக்கு இஷான் கிஷன்-ஹர்திக் பாண்டியா ஜோடி நம்பிக்கை அளித்து வருகிறது.

16 வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், 'பி' பிரிவில் நடப்பு சாம்பியன் இலங்கை, வங்க தேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறும். சூப்பர் 4 சுற்றுக்குள் நுழையும் 4 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை போட்டியிட வேண்டும்.

சூப்பர் 4 சுற்றின் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி போட்டிக்கு தகுதிபெறும். இதில் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் 238 ரன் வித்தியாசத்தில் நேபாளத்தை அடித்து நொறுக்கியது. இதனை தொடர்ந்து நடைபெற்ற  2 வது லீக் போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்க தேச அணியை வீழ்த்தியது.

இந்த நிலையில் தொடரின் 3 வது லீக் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இலங்கையில் உள்ள பல்லகலே மைதானத்தில் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

இதன் படி, இந்திய அணியின் இன்னிங்ஸை கேப்டன் ரோஹித் சர்மா-சுப்மன் கில் ஜோடி துவங்கியது. ரோஹித் சிறிது அதிரடியாக ஆட, சுப்மன் கில் ஆமை வேகத்தில் விளையாடி வெறுப்பேற்றினார். மழைக்கு முன்பாக நன்கு விளையாடிய ரோஹித் மழைக்கு பின்பு ஆட்டமிழந்தார். பின்னர் வந்த ரன் மெஷின் விராட் கோலி 7 பந்துகளை சந்தித்து 4 ரன்களில் ஆட்டமிழந்து இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார்.

பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் அய்யர் அதிரடியாக விளையாட முயற்சித்து 9 பந்துகளில் 14 ரன்கள் சேர்த்து, ஒரு ஷார்ட் பிட்ச் பந்துக்கு இரையானார். இதன் பின்னர் இணைந்த இஷான் கிஷன்-ஹர்திக் பாண்டியா ஜோடி நிதானமாகவும் அதே நேரத்தில் தவறான பந்துகளை தண்டித்தும் விளையாடி இந்திய இன்னிங்ஸை வளர்த்தனர்.

இஷான் கிஷன்-ஹர்திக் பாண்டியா இருவருமே அரைசதம் விளாசி நம்பிக்கை அளித்து வருகின்றனர். இந்திய அணி 35 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்கள் சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.