உயிரிழந்த சுஷாந்த் சிங் குறித்து சுரேஷ் ரெய்னா வெளியிட்ட நெகிழ்ச்சி ட்வீட்! ஆறுதலில் ரசிகர்கள்!

உயிரிழந்த சுஷாந்த் சிங் குறித்து சுரேஷ் ரெய்னா வெளியிட்ட நெகிழ்ச்சி ட்வீட்! ஆறுதலில் ரசிகர்கள்!


suresh raina talk about susanth sing

கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில்  நடித்ததன் மூலம் இந்தியளவில் பிரபலமானவர் நடிகர் சுஷாந்த் சிங். பாலிவுட் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருந்த இவர் கடந்த ஜூன் 14 ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இவரது இத்தகைய விபரீத முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 சுஷாந்த் மரணத்தில் பெரும் மர்மம் இருப்பதாகவும், சிபிஐ விசாரணை தேவை எனவும் பல்வேறு கோரிக்கைகள் எழுந்தது. இதனையடுத்து நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தநிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, அவரது ட்விட்டர் பக்கத்தில் மறைந்த சுஷாந்த் சிங் குறித்து கருத்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "சகோதரரே நீங்கள் எப்போதும் எங்களின் இதயத்தில் உயிருடன் இருக்கிறீர்கள், உங்களது ரசிகர்கள் எல்லாவற்றையும் விட உங்களையே அதிகம் இழந்ததாக உணர்கிறார்கள். எனக்கு அரசாங்கம் மீது நம்பிக்கை உள்ளது. இங்குள்ள தலைவர்கள் உங்களுக்கு நீதி வழங்கும் வகையில், உங்களது இறப்பில் சம்பந்தப்பட்ட ஒரு துகளை கூட விடமாட்டார்கள். உண்மையில் நீங்கள் ஒரு உத்வேகமளிக்ககூடிய மனிதர் என்று பதிவிட்டு, வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.