தோனிக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் யார்.? சுரேஷ் ரெய்னா ஓப்பன் டாக்.!

தோனிக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் யார்.? சுரேஷ் ரெய்னா ஓப்பன் டாக்.!



suresh raina talk abiut next csk captain

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் நட்சத்திர வீரராக திகழ்ந்து ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் சுரேஷ் ரெய்னா. சிஎஸ்கே அணிக்காக பல ஆண்டுகள் சிறப்பான பங்களிப்பை கொடுத்த சுரேஷ் ரெய்னாவை இந்த ஆண்டு எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. இதனையடுத்து இந்த சீசனில் வர்ணனையாளராக செயல்பட உள்ளார் சுரேஷ் ரெய்னா.

இது குறித்து அவர் அளித்த பேட்டியில், வர்ணனையாளர் பணிக்கு என்னை தயார்படுத்தி கொண்டுள்ளேன். எனது நண்பர்கள் இர்பான் பதான், ஹர்பஜன்சிங், பியுஸ் சாவ்லா ஆகியோர் ஏற்கனவே வர்ணனையாளராக உள்ளனர். இந்த சீசனில் ரவிசாஸ்திரியும் வர்ணனை குழுவில் இடம் பிடித்துள்ளார். எனவே இது எனக்கு எளிதாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.

சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, அம்பத்தி ராயுடு, ராபின் உத்தப்பா, வெய்ன் பிராவோ ஆகியோரால் அணியை வழிநடத்த முடியும். கேப்டன்ஷிப்புக்குரிய திறமை இவர்களிடம் உண்டு. ஆட்டத்தை நன்றாக புரிந்து செயல்படக்கூடியவர்கள். தோனிக்கு பிறகு சென்னை அணியின் அடுத்த கேப்டனாக இவர்களால் வர முடியும் என தெரிவித்தார்.