அனைத்து அணிகளாலும் புறக்கணிக்கப்பட்ட சுரேஷ் ரெய்னா.! ரசிகர்களுக்காக மீண்டும் களமிறங்குகிறார்.! ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சி

அனைத்து அணிகளாலும் புறக்கணிக்கப்பட்ட சுரேஷ் ரெய்னா.! ரசிகர்களுக்காக மீண்டும் களமிறங்குகிறார்.! ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சி



suresh-raina-re-entry-in-ipl

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் நட்சத்திர வீரராக திகழ்ந்து ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் சுரேஷ் ரெய்னா. சிஎஸ்கே அணிக்காக பல ஆண்டுகள் சிறப்பான பங்களிப்பை கொடுத்த சுரேஷ் ரெய்னாவை இந்த ஆண்டு அந்த அந்த அணி தக்கவைக்கவில்லை. சரி ஏலத்திலாவது ரெய்னாவை எதாவது ஒரு அணி எடுப்பார்கள் என்று பார்த்தால் ரெய்னவை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

இதனையடுத்து குஜராத் அணியில் இடம்பெற்றிருந்த ஜேசன் ராய், ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து, அவருக்கு பதிலாக ரெய்னா சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரெய்னாவை தேர்வு செய்யாமல் ஆப்கானிஸ்தான் வீரர் ஒருவரை அந்த அணி தேர்வு செய்தது. இதனால் ரெய்னா ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். 

இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் ரெய்னா புதிய அவதாரம் ஒன்று எடுக்க உள்ளார். ரெய்னாவுக்கு அதிக ரசிகர்கள் பட்டாளம் இருப்பதை உணர்ந்த ஸ்டார் நிறுவனம் அவரை வர்ணனையாளராக ஒப்பந்தம் செய்ய பெரும் தொகையை வழங்க முன்வந்தது. ரசிகர்களுக்காக அந்த பணியை ஒப்புக்கொண்டுள்ள ரெய்னா, ஐபிஎல் தொடரில் வர்ணனையாளராக களமிறங்குகிறார். ரெய்னா மட்டுமல்லாமல் ரவி சாஸ்த்ரியும் கிரிக்கெட் வர்ணனைக்கு ஐபிஎல் மூலம் மீண்டும் திரும்புகிறார். இதனால் ரசிகர்கள் டபுள் சந்தோசத்தில் உள்ளனர்.