இந்தியாவுக்கு எதிரான டி-20 தொடரில் இருந்து முழுவதுமாக விலகிய தென் ஆப்பிரிக்கா வீரர்.! என்ன காரணம்.?

இந்தியாவுக்கு எதிரான டி-20 தொடரில் இருந்து முழுவதுமாக விலகிய தென் ஆப்பிரிக்கா வீரர்.! என்ன காரணம்.?



south africa player Markram Ruled Out of Last Two T20

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்திலும் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.

இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்று, நடந்துமுடிந்த முதல் 3 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 2 போட்டியிலும் ,இந்திய அணி 1 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் மோதும் 4வது போட்டி நாளை நடைபெறுகிறது .

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா அணியின் பேட்ஸ்மேன் மார்க்ரம் தொடரில் மீதமுள்ள 2 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார் முதல் டி20 போட்டிக்கு முன்பாக அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் 7 நாட்கள் தனிமைபடுத்துதலில் இருந்தார். இதனால் 3 போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை. இந்த நிலையில் தற்போது மீதமுள்ள 2 போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.