தோனி மீது சேவக் பரபரப்பு புகார்..! ஆனால் சச்சின் தான் என் முடிவை மாற்றினார்..!ரகசியத்தை போட்டுடைத்த சேவாக்.!

தோனி மீது சேவக் பரபரப்பு புகார்..! ஆனால் சச்சின் தான் என் முடிவை மாற்றினார்..!ரகசியத்தை போட்டுடைத்த சேவாக்.!


sehwag talk about MS Dhoni

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் விரேந்தர் சேவாக். 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற தோனி தலைமையிலான இந்திய அணியில் இடம் பெற்று இருந்த இவர் தோனியை குறிப்பிட்டு 2008 ஆம் ஆண்டு நடந்த ஒரு சம்பவத்தை பற்றி பரபரப்பாக பேசியுள்ளார்.

அவர் கூறுகையில், 2008ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் முத்தரப்பு தொடரில் முதல் 4 போட்டியில் விளையாடிய நான், அரைசதம் அடிக்க வில்லை என்ற காரணத்தால் தோனி என்னை அணியிலிருந்து நீக்கிவிட்டார். பிறகு சச்சின், கம்பீர், ராபின் உத்தப்பாவை தொடக்கத்திலும், ரோகித் சர்மா, யுவராஜ், தோனி ஆகியோர் நடுவரிசையிலும் விளையாடினர்.

அந்த ஒருநாள் தொடரில் நான்கு போட்டிகளில் என்னால் அவ்வளவு ரன்கள் எடுக்க முடியவில்லை. அதனால் எம்எஸ் தோனி என்னை விளையாடும் லெவன் அணியில் இருந்து நீக்கினார். அப்போது ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறலாம் என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது. டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் தொடர்ந்து விளையாடுவேன் என்று நினைத்தேன்.

அப்போது சச்சின் டெண்டுல்கர் தான் என்னை தடுத்து நிறுத்தி ஓய்வு பெறாமல் இருக்க செய்தார். அப்போது சச்சின் என்னிடம் 'இது உங்கள் வாழ்க்கையின் மோசமான கட்டம். காத்திருங்கள், இந்த சுற்றுப்பயணத்திற்குப் பிறகு வீட்டிற்குச் செல்லுங்கள், நன்றாக யோசித்து, அடுத்து என்ன செய்வது என்று முடிவு செய்யுங்கள் என தெரிவித்தார்.

இது குறித்து அப்போதைய தேர்வுக்குழுத் தலைவர் ஸ்ரீகாந்திடம் என்னை தொடர்ந்து அணியில் எடுக்க வேண்டும் என்று உறுதி கொடுங்கள், இல்லையேனில் ஓய்வு பெறுகிறேன் என்று கேட்டேன். ஆனால் தோனியே, தம்மிடம் நீங்கள் அனைத்து போட்டியிலும் விளையாடுவீர்கள் என உறுதி அளித்தார். அதன் பிறகு தான் எனக்கு நம்பிக்கை வந்து மீண்டும் ஒருநாள் போட்டியில் விளையாடி ரன்கள் குவித்தேன் என்று சேவாக் கூறினார்.