அவுட் ஆன பிறகும் அடித்து நொறுக்கிய ரஸ்ஸல்! கேப்டனாக அஸ்வின் செய்த மிக பெரிய தவறு!

அவுட் ஆன பிறகும் அடித்து நொறுக்கிய ரஸ்ஸல்! கேப்டனாக அஸ்வின் செய்த மிக பெரிய தவறு!



russell-luckey-in-today-ipl-match

ஐபில் போட்டியின் 12 வது சீசன் ஆரம்பித்து இதுவரை ஐந்து போட்டிகள் நடைபெற்றுளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நடைபெறுவரும் இந்த போட்டியானது தற்போது மேலும் சூடுபிடித்துள்ளது.

ஐபில் போட்டியின் 12 வது சீஸனின் ஆறாவது போட்டியான இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். 

russell

இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியின் துவக்க வீரரான க்றிஸ் லைன் சொர்ப்பரண்களில் வெளியேறினார். நரேன் 9 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்ததாக கைகோர்த்த உத்தப்பா, ராணா ஜோடி சிறப்பாக ஆடி அணியின் எணிக்கையை உயர்த்தினர்.

சிறப்பாக ஆடிய நிதிஸ் ராணா 34 பந்துகளில் 63 ரன்கள் எடுத்து அதிரடியாக ஆடி அவுட் ஆகி வெளியேறினார். ராபின் உத்தப்பா நிதானமாக ஆடி 65 ரன்களை எடுத்தார். 

russell

ரஸல் 16 வது ஓவரின் இறுதி பந்தில் அவுட் ஆனார். ஆனால் மைதானத்தின் இன்னர் சார்கிலில் 4 வீரர்கள் பீல்டிங் செய்ய வேண்டும். ஆனால் மூன்று வீரர்கள் மட்டுமே நின்றதால் நடுவர்கள் நோபால்  அறிவித்து ப்ரீ ஹிட் கொடுத்தனர். அந்த அதிர்ஷ்டத்தால் ரஸல் 17 பந்துகளுக்கு 48 ரன்கள் எடுத்தார் அதில் மூன்று பவுண்டரிகளும் ஐந்து சிக்ஸர்களும் அடங்கும். இந்தநிலையில் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி  218 ரன்களை எடுத்து.

இதனையடுத்து 219 ரன்கள் எடுத்தால் வெற்றி இன்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் ஆணி ஆரம்பத்திலே மோசமாக ஆடிவருகிறது. இதுவரை பஞ்சாப் அணி 15 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் எடுத்து ஆடிவருகிறது.