நேற்றைய ஆட்டத்தில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் வரலாற்று சாதனை படைத்த ரோஹித் சர்மா.!

நேற்றைய ஆட்டத்தில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் வரலாற்று சாதனை படைத்த ரோஹித் சர்மா.!



rohit sharma new record

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்தநிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 3வது  டெஸ்ட் போட்டி  சிட்னி மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங்கை தேர்வு செய்தார். 

முதல்நாள் ஆட்டம் மழையால் பாதியில் பாதிப்படைந்தது.  இதனால் சிறிது நேரம் போட்டி ஒத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து மழை நின்று மீண்டும் போட்டி தொடர்ந்தது. இதனையடுத்து முதல் நாள் ஆட்டநேர முடிவில் 55 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்களை ஆஸ்திரேலிய அணி எடுத்திருந்தது. இந்தநிலையில், நேற்று 2வது நாள் ஆட்டம் தொடங்கியது. 

நேற்றைய தினம் 105.4 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 338 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியின் ஜடேஜா 4 விக்கெட்டுகளும், சைனி மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகளும், சிராஜ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதனையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்ய தொடங்கியது.  இந்திய அணியின் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர். நேற்றைய போட்டியில் 16வது ஓவரில் லயன் வீசிய பந்தில் ரோகித் சர்மா அடித்த சிக்சர் அவருக்கு வரலாறு படைக்க உதவியது. சர்வதேச போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அனைத்து நிலைகளிலும் சேர்த்து 100 சிக்சர்களை அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றுள்ளார்.  

நேற்றைய ஆட்டத்தில் ரோஹித் சர்மா  26 ரன்களில் வெளியேறினார். இதனையடுத்து சிறப்பாக ஆடிய கில் (50) அரைசதம் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.  இந்திய அணியில் புஜாரா (9) மற்றும் ரகானே (5) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.  2வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 45 ஓவர்களில் 2 விக்கெட்டுகளுக்கு 96 ரன்கள் எடுத்துள்ளது.