ராகுல் டிராவிட்டுக்கு எச்சரிக்கை விடுத்த ரவி சாஸ்திரி.! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.!!

ராகுல் டிராவிட்டுக்கு எச்சரிக்கை விடுத்த ரவி சாஸ்திரி.! என்ன கூறியுள்ளார் பார்த்தீர்களா.!!



ravi sasthiri adviced rahul dravid

இந்திய அணி கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் தோற்றது, இதனையடுத்து விராட் கோலியின் விலகல், தென்னாப்பிரிக்காவுடனான தொடரில் மோசமான தோல்வி என இந்திய அணி மோசமான சவால்களை சந்தித்து வருகிறது.

இந்திய அணியின் இந்த சொதப்பல்களால் ராகுல் டிராவிட்டின் பயிற்சி மீது ரசிகர்கள் விமர்சனம் செய்து வந்தனர். இந்நிலையில் பிரச்சினையை சரிசெய்ய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அறிவுறைகளை கூறியுள்ளார். அதில், இந்திய அணிக்கு அடுத்த 8 - 10 மாதங்கள் மிக மிக முக்கியமான காலக்கட்டம் ஆகும்.

இந்த சமயத்தில் சரியான வீரர்களை தேர்வு செய்வது அவசியம். அவர்கள் அடுத்த 4 - 5 ஆண்டுகளுக்கு இந்திய அணியின் தூணாக இருக்க வேண்டும். என்னை பொறுத்தவரையில் சீனியர்கள் மற்றும் இளம் வீரர்கள் கலந்த அணியே சிறப்பாக இருக்கும். அணியின் எதிர்காலத்திற்காக சில சமயங்களில் முக்கிய மாற்றங்களை செய்தே தீர வேண்டும். அடுத்த 6 மாதத்திற்கு இளம் வீரர்கள் மீது கவனம் செலுத்துங்கள் என தெரிவித்துள்ளார்.