அதிரடியாக ஆடி ரன்களை குவித்த கெயில் மற்றும் கே.எல்.ராகுல்.! அசால்ட்டாக முடித்த ராஜஸ்தான் ராயல்ஸ்.!

அதிரடியாக ஆடி ரன்களை குவித்த கெயில் மற்றும் கே.எல்.ராகுல்.! அசால்ட்டாக முடித்த ராஜஸ்தான் ராயல்ஸ்.!


rajasthan-royals-won-kings-11-punjab

ஐபிஎல் 13 வது சீசன் T20 போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இன்று நடக்கும் 50வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவிற்கு 4 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது.

பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக கிறிஸ் கெயில் 63 பந்துகளுக்கு 99 ரன்களும். கே.எல்.ராகுல் 41 பந்துகளுக்கு 46 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆகி வெளியேறினர்.  இதனையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி ஆரம்பத்திலிருந்து சிறப்பாக ஆடியது. பஞ்சாப் அணியின் துவக்க வீரர்களாக களமிறங்கிய உத்தப்பா மற்றும் ஸ்டோக்ஸ் இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

kings 11 punjab

ராபின் உத்தப்பா  23 பந்துகளுக்கு 30 ரன்களும், ஸ்டோக்ஸ் 26 பந்துகளுக்கு 50 ரன்களும், சஞ்சு சாம்சன் 25 பந்துகளுக்கு 48 ரன்களும் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினர். அடுத்ததாக ஆடிய ஸ்மித் மற்றும் பட்லர் சிறப்பாக ஆடி ராஜஸ்தான் அணி 17.3  ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.