வேற லெவல் கேப்டன் சார் நீங்க.! கோலி படையை எகிறி அடித்த கே.எல்.ராகுல்.! பஞ்சாப் கிங்ஸ் தாறுமாறு.!

வேற லெவல் கேப்டன் சார் நீங்க.! கோலி படையை எகிறி அடித்த கே.எல்.ராகுல்.! பஞ்சாப் கிங்ஸ் தாறுமாறு.!


punjab-kings-won-by-34-runs

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தொடரின் 26-வது லீக் ஆட்டம் அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. நேற்றைய ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதியது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து பஞ்சாப் அணியின் துவக்க வீரர்களாக கேஎல் ராகுல் மற்றும் பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். பிரப்சிம்ரன் சிங் 7 ரன்கள் எடுத்தநிலையில் வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கி சிறப்பாக ஆடிய கெய்ல் 46 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆகினார். அடுத்து வந்த வீரர்கள் பூரன் 0, ஹூடா 5, ஷாருக்கான் 0, என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
 
துவக்க வீரராக களமிறங்கி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல் 51 பந்துகளில் 91 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். இறுதியில், பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்கியது. 

rcb

பெங்களூரு அணியின் துவக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். தேவ்தத் படிக்கல் 7 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆகி வெளியேறினார். ரஜத் பட்டிதார் 31 ரன்கள் எடுத்தநிலையில் அவுட் ஆகி வெளியேறினார். இதனையடுத்து விராட் கோலி 35 ரன்னும்,  ஹர்ஷல் படேல் 31 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். இதனையடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 

இறுதியில் ஹர்ஷல் படேல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 13 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில், பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் பஞ்சாப் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.