பஞ்சாப் அணியில் சிக்கல்..! முக்கிய நபர் விலகலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!

பஞ்சாப் அணியில் சிக்கல்..! முக்கிய நபர் விலகலால் ரசிகர்கள் அதிர்ச்சி.!



problems in punjab kings team

2022 ஐபிஎல் தொடருக்காக பிசிசிஐ தயாராகி வரும் நிலையில் இந்தாண்டு புதிதாக லக்னோ, அகமதாபாத் என இரண்டு அணிகள் இணைந்துள்ளதால் வீரர்களுக்கான மெகா ஏலம் பெங்களூருவில் இன்றும், நாளையும் நடக்கவுள்ளது. 

பஞ்சாப் அணியில் நிர்வாகிகளுக்கு இடையே ஏற்கனவே மோதல் இருந்தது. அந்த அணியில் தொடர விரும்பவில்லை என்று கூறி கே.எல்.ராகுல், ஷாரூக்கான் ஆகியோர் விலகினர். இதனால் பஞ்சாப் அணி மாயங் அகர்வால் மற்றும் அர்ஷிதீப் சிங் மட்டுமே ஏலத்திற்கு முன் தக்க வைத்துள்ளது.

இந்நிலையில் ஏலத்தில் வீரர்களை தேர்வு செய்வதில் பஞ்சாப் அணி நிர்வாகிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் தொடர்ச்சியாக எ பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் வாசிம் ஜாபர் தனது பொறுப்பிலிருந்து விலகுவதாக கடைசி நேரத்தில் அறிவித்துள்ளார். 

அதேபோல் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான ப்ரீத்தி ஜிந்தா ஏலத்தில் பங்கேற்க போவதில்லை என்று அறிவித்துள்ளார். இது பஞ்சாப் அணி ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.