அரையிறுதி: டாஸ்ஸில் இந்தியா தோல்வி! நியூசிலாந்து முதல் பேட்டிங்

அரையிறுதி: டாஸ்ஸில் இந்தியா தோல்வி! நியூசிலாந்து முதல் பேட்டிங்



Newzland won the toss and bat first

கிரிக்கெட் ரசிகர்களுக்கு கடந்த ஒரு மாத காலமாக மிகப்பெரும் விருந்தாக அமைந்திருந்தது உலக்கோப்பை கிரிக்கெட் தொடர். தற்போது இந்த தொடர் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. 

இன்று மான்செஸ்டார் ஓல்டு ட்ரஃப்போர்டு மைதானத்தில் நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. 

wc2019

இந்திய அணியில் குல்தீப் யாதவிற்கு பதிலாக சாகல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். நியூசிலாந்து அணியில் சௌதீ நீக்கப்பட்டு பெர்குயூசன் மீண்டும் அணியில் இணைந்துள்ளார்.