இந்திய அணியில் சச்சினுக்கு காத்திருக்கும் மிகப் பெரிய பொறுப்பு! கங்குலி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு.! உச்சகட்ட குஷியில் ரசிகர்கள்.!

இந்திய அணியில் சச்சினுக்கு காத்திருக்கும் மிகப் பெரிய பொறுப்பு! கங்குலி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு.! உச்சகட்ட குஷியில் ரசிகர்கள்.!


new post for sachin

பிசிசிஐயில் சச்சினுக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என கங்குலி அறிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரரான கங்குலி, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்து முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்திய அணியின் முக்கிய வீரர்களாக இருந்து வந்த டிராவிட்டிற்கு சமீபத்தில், இந்திய கிரிக்கெட் அணிக்கான தலைமை பயிற்சியாளர் பதவியும், அதைத் தொடர்ந்து லட்சுமணனுக்கு கிரிக்கெட் அகாடமியின் இயக்குனர் பதவியும் கொடுக்கப்பட்டது.

ஆனால், கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என்று கூறப்படும், சச்சினுக்கு எந்த ஒரு பொறுப்பும் கொடுக்கப்படவில்லையே என்ற கேள்வி எழுந்து வந்தது. இந்தநிலையில் தற்போது இது தொடர்பான கேள்விக்கு கங்குலி மகிழ்ச்சியான பதிலை அளித்துள்ளார். 

இதுதொடர்பாக அவர் கூறுகையில், சச்சினுக்கு இந்திய அணியில் மிகப் பெரிய பொறுப்பு காத்திருக்கிறது. அவருடைய பங்கை இந்திய அணிக்கு எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து நல்லதொரு முடிவை யோசித்து வைத்துள்ளேன். அப்போது சச்சினின் பங்களிப்பை நீங்கள் பார்ப்பீர்கள், இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வரும் என்று கூறியுள்ளார்.