சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் இளம் நட்சத்திர கிரிக்கெட் வீரர் கைது; விசாரணையில் பரபரப்பு தகவல்.!

சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் இளம் நட்சத்திர கிரிக்கெட் வீரர் கைது; விசாரணையில் பரபரப்பு தகவல்.!



Nepal Kathmandu Minor Girl Abused by Nepal Team Star Cricketer Sandeep

 

நேபாள அணியின் கிரிக்கெட் வீரர் சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 

நேபாளம் நாட்டில் உள்ள காத்மண்டை சேர்ந்த நேபாள கிரிக்கெட் அணியின் வீரர் சந்தீப் லாமிச்சனே (வயது 22). இவர் இளம் கிரிக்கெட் வீரராக அந்நாட்டில் அறியப்படுகிறார். மேலும், இளம்வயதில் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்கள் பட்டியலுக்கும் உயர்ந்துள்ளார். 

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 21ம் தேதியில் 17 வயது சிறுமியை தன்னுடன் அழைத்து சென்று விடுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகார் எழவே, சந்தீப் லாமிச்சனே கைது செய்யப்பட்டார். 

Nepal

இதனால் அவர் விளையாடுவதாக அறிவித்து இருந்த கரீபியன் பிரீமியர் லீக் போட்டியில் இருந்து சந்தீப் லாமிச்சனே விடுவிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை மீண்டும் நீதிபதி முன் சமர்ப்பிக்க அழைத்து செல்லப்படவுள்ளார்.