ரோஹித் சர்மா இல்லாத நேற்றைய ஆட்டம்!! ஆட்டத்தை வேறு பாதைக்கு எடுத்துச்சென்ற பொல்லார்ட்!!

ரோஹித் சர்மா இல்லாத நேற்றைய ஆட்டம்!! ஆட்டத்தை வேறு பாதைக்கு எடுத்துச்சென்ற பொல்லார்ட்!!



mumbai-indians-won-yesterday-match


ஐபில் போட்டியின் 12 வது சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 24வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் அணிகள் எதிர்கொண்டது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி  பந்து வீச்சை தேர்வு செய்தது. நேற்றைய ஆட்டத்தில் இதுவரை மும்பை அணியின் கேப்டனாக இருந்து வந்த ரோகித் சர்மா ஆடவில்லை. அவருக்கு பதிலாக சித்தேஷ் களமிறங்கினார்.

பஞ்சாப் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கிறிஸ் கெயில் மற்றும் லோகேஷ் ராகுல் சிறப்பாக ஆடினர்.  கிறிஸ் கெயில் 36 பந்துகளுக்கு 63 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார். லோகேஷ் ராகுல் 64 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் கடைசி வரை களத்தில் நின்றார். பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிந்த நிலையில் 4 விக்கெட் இழப்பிற்கு  197 ரன்கள் எடுத்தது.

Mumbai indians

198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி ஆரம்பத்திலிருந்து சொதப்பியது. மிகவும் மோசமான முறையில் ஆடிக்கொண்டிருந்த மும்பை அணியை  பொல்லார்ட் களமிறங்கி அதிரடியாக ஆடி பந்துகளை நாலாபக்கமும் பறக்கவிட்டார். சிறப்பாக ஆடிய பொல்லார்ட்  31 பந்துகளில் 81 ரன்கள் அடித்து அவுட் ஆகி வெளியேறினார். 

Mumbai indians

பரபரப்பாக போய்க்கொண்டிருந்த நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணி 1 பந்துகளுக்கு 2 ரன்கள் எடுக்கவேண்டும் என்ற சூழ்நிலை இருந்தது. அப்போது மும்பை அணியின் அல்ஜரி ஜோசப் 2 ரன்களை தட்டிவிட்டு மும்பை அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.