16 வது ஐ.பி.எல் திருவிழா!!: தொடரில் இருந்து விலகிய ரோஹித் சர்மா?!!.. மும்பை ரசிகர்கள் சோகம்..!!

16 வது ஐ.பி.எல் திருவிழா!!: தொடரில் இருந்து விலகிய ரோஹித் சர்மா?!!.. மும்பை ரசிகர்கள் சோகம்..!!



Mumbai Indians captain Rohit Sharma will not play some matches in the IPL series.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஐ.பி.எல் தொடரில் சில ஆட்டங்களில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

16 வது ஐ.பி.எல் டி-20 போட்டிகள் வரும் மார்ச் 31 ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்ப்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும் முன்னாள் சாம்ப்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும்.

ஐ.பி.எல் டி-20 போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஐ.பி.எல் தொடரில் சில ஆட்டங்களில் விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தொடர் தொடங்குவதற்கு முன்னரே மும்பை அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா மற்றும் ரிச்சர்ட்சன் காயம் காரணமாக விலகியது அந்த அணிக்கு பின்னடைவாக கருதப்பட்ட நிலையில் இது அந்த அணிக்கு பெரும்  அதிர்ச்சியை அளித்துள்ளது

ஐ.பி.எல் தொடருக்கு பின்னர் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், முழு உடற்தகுதியுடனும், புத்துணர்ச்சியுடனும் கலந்து கொள்ள ஏதுவாக  இந்த முடிவு எடுக்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரோஹித் சர்மா விளையாடாத நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியை சூர்யகுமார் யாதவ் வழிநடத்துவார் என்று கூறப்படுகிறது.